இருவருக்கும் தான்
செங்கமலத் தாயாரின்
தேரோட்டத் திருவிழா
தாயாருக்கு பள்ளி பிள்ளைகளே
சாரதியானார்கள்
பிஞ்சுக் கரங்களில்
தஞ்சம் புகுந்த வடம் உதவ
தடையில்லா நீரோட்டம் போல்
தேரோட்டம்
தேரோட்ட வீதியின்
நெருஞ்சி முட்கள் கூட
பாலகர்களின் பாதம் பட்டு
பாவ விமோசனம் பெற்றது
சேயின் பலம் தாய்க்கு
தாயின் அருள் சேய்க்கு
பக்தகோடிகளின் வழிபாடு
இருவருக்கும் தான்