அமிழ்த்தப்பட்ட அத்திவரதன்

அத்தி வரதனால்
பக்தி பெருகிச்சோ
வெத்து வியாபாரத்தால்
சொத்து சேர்ந்திச்சோ

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்
நிற்கத் துணிந்தவனை
நாற்பத்தெட்டு நாட்களுக்குப் பின்
நீரில் அமிழ்த்திவிட்டர்

ஓடி இளைக்க வேண்டிய
உருவத்தில் உள்ளோராலே
ஓரத்தில் நிற்க வைக்க
பேரங்கள் பெருகியதாம்

ஆகமம் என்றுச் சொல்லி
அறிவை மங்கச் செய்து
ஆளாளுக்கு இங்கு
அகப்பட்டோரிடம் பிடுங்கிக் கொண்டர்

அத்தியால் செய்யப்பட்டவன்
அத்தாய் மட்டுமே நின்றான்
மற்றவர் எல்லோரும்
மட்டற்று பொருள் ஈட்டினர்

கடவுளின் பெயராலே
கண்டபடி பல கொள்ளைகள்
வெண் தாடி வேந்தனின்
பொன் சொல்லை மெய்பித்தன

தற்போதைய அரசியலுக்கு
தங்க கம்பளமாய் வரதன் பெயர்
பகுத்தறிவுப் பேசுவோரெல்லாம்
வரதன் பாதத்தில் எதனையோத்தேடி

கஞ்சியை மறந்தும் பலர்
காஞ்சிக்கு விரைந்து சென்றர்
கண்ணால் கண்டுவிட்டால்
கட்டுண்ட பாவம் களையும் என்றர்

ஒத்தையாய் நின்ற வரதன்
ஒவ்வொருவரையும் தூண்டிவிட்டான்
ஒவ்வொரு வகையிலே மனத்துயர் பெருகவே
ஓதியவன் ஓடிவிட்டான்
உதவியவன் பாவப்பட்டான்.

2019 ல் வரதனால் பல வழக்கு
நான்கு பாத்தாண்டுக்குப்பின்
நிற்கும் போது வரதன் கதி
அந்த சிவன் தான் காப்பாற்றணும் வரதனை.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Aug-19, 6:48 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 60

மேலே