சாகடிக்கப்பட்டது

இசை அரங்கம் எங்கும்
நிரம்பி வழியும்
இசைப்பிரியர்கள்,
இடையில்
இம்சை படுத்த வந்ததுபோல்
இசை பாடி வந்தது ஒன்று

கச்சேரியில் இசைத்த
கல்யாணி இராக பாடலுக்கு
அரங்கம் அதிர கரவொளி
அடிபட்டு செத்தது கொசு—அதன்
சங்கீதம் அரங்கேறாமல்
சாகடிக்கப்பட்டது

எழுதியவர் : கோ. கணபதி. (25-Aug-19, 6:21 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 67

மேலே