இயற்கை

மாமரத்து குயில் பாட்டு
காதில் வந்து விழுகுது
மாவின் மணம் சேர்த்து
வேப்ப மர குயிலின் கீதம்
காற்றில் வந்து காதில் விழுகுது
சித்திரையில் பூத்த வெள்ளை
வேப்ப மலரின் சுகந்தம் சேர்த்து
என்ன சுகம் இயற்கைத்தரும்
இந்த குயில்களின் இன்னிசைகூவல்
இதோ மன்றத்தில் பாடுகிறான் ஒருவன்
தன்னை மறந்து பாடினாலும்
இளமையின் ஆணவமும் செருக்கும்
அவன் சேஷ்டைகளில்……

இயற்கையின் சங்கீதத்தில் இவை ஏதும் இல்லை
நம்மை மறக்க செய்யும் மதுர கீதங்கள் அவை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Sep-19, 4:05 pm)
Tanglish : iyarkai
பார்வை : 644

மேலே