நன்றியுடன்
வண்ணக்குரல் குருவியொன்று
தேனூற்றில் மயங்கும்
அன்றாடம் பூக்களில் அது
வந்து அமர மறுப்பதில்லை
ஆனாலும் அது சொல்லும்
கதையொன்று நம்காதில் கேட்கும்
நானொரு
சின்னக் கவி பாடும்கவிஞன்
என் குரலில் மயங்காத
மனம் ஒன்றும் இல்லை
ஆனாலும் என் மனம் மயங்கும்
அந்த
மலர் மட்டும் எனக்கே எனக்கு
அது மலர்வதும் எனக்காக
வாழ்வதும் எனக்காக
மலரே உன்னால் என் வாழ்வு
ராகம் இதில் தொனிக்கும்