காதல் தனிமை

கவிதையில் சொல்லாத காதல்
உன் விழியின் நளினத்தில் நீ சொல்ல!

கொஞ்சம் மைபூசி கொஞ்சி மெய் பேசும்
விழியினை யார் என்று வியந்து நான் கேட்க!

செங்காந்தள் கரங்கள் எனை தீண்ட
மின்காந்தம் உடலோடு பாய மெய்மறந்தேன்!

சங்கீத பேச்சிக்கள் காதோரம் இசைக்க
அங்கத்தில் காதல் அரும்புகள் பூக்க!

செந்தூரம் சிந்தாதேன் சிந்தும்
மதுர இதழ்கள் இணைசேர!

மனதோடு அந்திப்போர் நிகழ
உயிர்பருகி வெற்றி கனி பறித்து சென்றாய்!

உயிரற்ற உடல் இன்றும்
உன்வரவை நோக்கி தனிமையில் துடித்தபடி..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (14-Oct-19, 5:34 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : kaadhal thanimai
பார்வை : 380

மேலே