அவள் முகம்

குளத்தில் முழுவதுமாய் காலையில்
மலர்ந்த செந்தாமரையைப் பாத்தேன்
உன் முகம் பார்த்தேன் கண்ணே அது
தாமரையானது, மனதில் நினைத்தேன்
இந்த அழகிய தாமரை மலருக்கு
பேச மட்டும் தெரிந்தால் என்ன பேசியிருக்கும்
உன் முகத்தைப் பார்த்து, சொல்லுகிறேனடி கேள்,
அது சொல்லி இருக்கும்' அழகிய பெண்ணே
சிவந்த உன் முகமும் அதன் பொலிவும்
என்னைக் கொஞ்சம் சிணுங்கவே செய்கிறது
பொறாமையில், உன் முகம் என் முகத்தை விட
பேரழகே .... ஹும்.... ' என்று
இதைக்கேட்டு என்னவள் நாண நான்
அவளைக் கட்டி அனைத்து இதழ்களில்
முத்தம் வைத்தேன் ....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Oct-19, 1:53 pm)
Tanglish : aval mukam
பார்வை : 192

சிறந்த கவிதைகள்

மேலே