மூன்று நிமிட புணர்தலுக்கு

ஊருக்கு பேரு வச்சான்
பேரு போல இல்ல ஊரு
ஆளுக்கு பேரு வச்சான்
அத்தனையும் கெட்ட பேரு

கற்றவங்க சொல்லி வச்ச
கச்சித கருத்தப் பாரு
கருத்தாலே யாரும் இங்கே
அர்த்தத்தோடு இல்ல பாரு

பச்சிளம் பெண் குழந்தை என்றும்
படுகின்ற பாட்டைப் பாரு
பாதுகாக்கும் தந்தைக் கூட
பாரியாள பார்க்கிறான் பாரு

மதத்தாலே அரசியல் பாரு
மதங்கொண்ட மக்களைப் பாரு
மக்கிப் போகும் உடலுக்காக
சொக்க வைக்கும் நகையைப் பாரு

மூன்று நிமிட புணர்தலுக்கு
மூச்சை போக்கும் கொலையைப் பாரு
காசுக்கான தேவையைப் பாரு
காடு மலை அழித்தல் பாரு

அரசாங்க சட்டம் பாரு
அதில் உள்ள உண்மை பாரு
அரவணைத்து செல்லாமலே
அதிகாரம் பண்ணும் நிலையைப் பாரு

அயல் நாட்டு மருந்தைப் பாரு
அதனால் ஆகும் நோயைப் பாரு
அடுத்தவன் உழைப்பைத் திண்ணும்
அதிகார வர்க்கத்தைப் பாரு

கோழையாய் நீ இருந்தால் - உன்
குடுமியும் கொள்ளைப் போகும்
கோபனாய் கொந்தளித்தால்
கும்மிருட்டு சிறை கிடைக்கும்

பாவத்தை செய்து வந்தால்
பாராட்டு நிறைய வரும்
பகலில் சிறந்த கணாவானாகவும்
இரவில் பலருக்கு கணவனாகவும்

இயல்பில் நீ வாழ்ந்து வந்தால்
இவ்வுலக உயிர்கள் எல்லாம்
இதயத்தில் கோயில் கட்டி
இறுதிவரை போற்றித் தொழும்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Nov-19, 10:16 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 97

மேலே