என்னே யான் செய்த குற்றம்
உன்னை கண்டது கண் செய்த குற்றமா?
உள்ளத்தில் கொண்டது மனம் செய்த குற்றமா?
உன்னுருவில் என்னை கண்டது குற்றமா?
உன்னறிவில் என்னை தொலைத்தது குற்றமா?
உன்னை நேசித்தது நான் செய்த குற்றமா?
உன்னுயிரும் நேசித்ததாய் எண்ணியது குற்றமா?
உயிரே ஓரணுவும் உன் உள்ளம் தொடாத
என் எண்ணம் குற்றம் தானோ ????????????