சோம்பிக் கிடந்திடில் வெற்றி கிடக்கும் தொலைவினிலே - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
தேம்பும் மனத்தினிற் தென்றலுந் தோன்றித் திளைத்திடவே
ஓம்பும் முயற்சியை யொன்றியே யெண்ணி யுழைத்திடுவாய்!
நாம்பெற்ற யிந்நாளி லூக்கி யுயர்வாய்! நலிந்திருந்து
சோம்பிக் கிடந்திடிற் வெற்றி கிடக்குந் தொலைவினிலே!
- வ.க.கன்னியப்பன்
குறிப்பு: இலந்தையார் தந்த ஈற்றடிக்கு எழுதிய கட்டளைக் கலித்துறை