சிலை வடித்தவன்
உடையில்லாத சிலை
உடையாத சிலை
ஒய்யார உன் நலினம்
என்னை மயக்குது
நான் ஒரு பார்வையாளன்
உன் பார்வையே
என்னை பற்றிக்கொண்டது
உன் மெல்லிய இடையே
என்னை உந்தி தள்ளுது
எதை நோக்கியோ-ஆனால்
உன்னை வடித்தவன் மட்டும்
உயிர் வாழ்கிறான்
உன் உருவத்தில்.