சம்மணம் என்றால் என்ன
நாம் எப்பொழுதும் காலை தொங்க வைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் .இரண்டு சக்கர வண்டியில் பயணிக்கும் பொழுது , பேருந்தில் பயணிக்கும் பொழுது இரயில் வண்டிகளில் பயணிக்கும் பொழுது திரை அரங்குகளில் , பள்ளியில் ,அலுவலகங்களில் ,வீடுகளில் இருக்கைகளில் இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரம் காலை தொங்கவைத்து கொண்டே இருக்கிறோம் . இப்படிக்கு காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குத் பல உடல் தொல்லைகள் உருவாகிறது .
இதற்கு காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும் போது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.
நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஓட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது .
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும் .
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம் , கணையம் , நுரையீரல் , மூளை ,கண் ,காது , ஆகியவை இடுப்புக்கு மேல்பகுதியில்தான் இருக்கிறது.
எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணக் கால் போட்டு அமர்ந்துதான் சாப்பிடவேண்டும் . ஏனென்றால் இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு திறனும் வயிற்றுப பகுதிக்கு செல்லும் பொழுது நமக்கு செரிமானம் நன்றாக நடைபெறுகிறது .
சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப பகுத்திக்கு செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது .
இந்திய வகை கழிப்பறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் . மேற்கத்திய வகை கழிப்பறை பயன் படுத்தும் போது குடலுக்கு அதிகஅளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும் . அதனால்தான் இப்பொழுது சிறு குழந்தைகள் கூட யூரோபின் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள் .
உங்களால் சம்மணக்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் . எனவே முடிந்தவரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள் .
கட்டிலில் , நாற்காலியில் அமரும் போதும் சம்மணம் இட்டே அமருங்கள் .
சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணக்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக செரிக்கும் .
சாப்பிடும் முறை :
நின்று கொண்டு சாப்பிடாதீர்கள்
குடும்பத்துடன் தரையில் அமர்ந்து ஒன்றாகா சாப்பிடுங்கள் .
பேசிக்கொண்டு , தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டு சாப்பிடக்கூடாது .
சாப்பிடும் போது இடையில் தண்ணீர் அருந்ததீர் .
அவசரமாக சாப்பிட வேண்டாம் .
பிடிக்காத உணவுகளை வெறுப்புடன் சாப்பிடவேண்டாம் .
நன்றா மென்று விழுங்கி சாப்பிடுங்கள் .
பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள் .
இரவு உணவில் முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை சேர்க்கவேண்டாம் .
சாப்பாட்டுக்கு அரைமணி நேரம் முன்பு பழங்களை சாப்பிடுங்கள் .
சாப்பிடும் முன்பு சிறிது தூரம் நடந்து விட்டு சாப்பிடுவது நலம் . இரவு சாப்பிட்ட பின் நடப்பது நலம் .
சாப்பிட வேண்டிய நேரம் காலை 7 முதல் 9 மணிக்குள் . மதியம் 1 முதல் 2 மணிக்குள்.இரவு 7 முதல் 8 மணிக்குள் .
சாப்பிட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்துதான் உறங்கவேண்டும் .
சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறவாதீர் .
நன்றி !