வெண்ணிலாயிங்கு ஏனோ விளம்பு

இரு விகற்ப நேரிசை வெண்பா
(ஒழுகிசைச் செப்பல் ஓசை)

அந்தியெழில் பொங்கிவரும் ஆனந்தப் பேரெழிலே!
சிந்தைதனில் செப்புவித்தை செய்திடும் - செந்தமிழ்ப்
பெண்ணழகே! புன்னகைப் பேரெழிலாய்ப் பூத்திருக்க
வெண்ணிலாயிங்(கு) ஏனோ விளம்பு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-20, 1:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 241

மேலே