தலை வணங்குகிறோம் திருமகனே திருமகளே

தலை வணங்குகிறோம்! திருமகனே! திருமகளே!
*****************************************************************
தெய்வங்கள் எல்லாம்
மண்ணில் வாழ்கிறது!
மனிதனில் வாழ்கிறது!
மருத்துவனாய்!
தேவதைகள் எல்லாம்
கண்ணில் படுகிறது!
கருணை செய்கிறது!
செவிலியராய்!!

உயிர் காக்கும்
உன்னத கரங்கள்
உம் கரங்கள்!
உன்னுயிர் பாராது
உதவிடும் உன்னுள்ளம்
இறை உள்ளம் தான்!
வாழும் இறைவனும்
இப்போ நீ தான்!

கண்ணில் காணும்
தேவதைகள்!
கருணை உள்ளம்
கொண்டு காத்திடும்
காவலர்கள்!
கரம் கூப்பி
கும்பிட இங்கெம்
காவல் தெய்வமும்
நீ தான்
செவிலி தாயே!

உண்ணும் நேரமில்லை
உறக்கம் இல்லை
உறைவிடம் செல்லவில்லை
உன்னுயிர் எண்ணவில்லை
உறவுகள் பெரிதில்லை
உன் சேவையில்லை
உலகில்...
உயிர் வாழ்பவனில்லை!!

காக்கும் தெய்வமெல்லாம்
கப்பலில் சுற்றுலா
கண்டிருக்கும்...!
இல்லை,
களைப்பிலே
உறங்கிருக்கும்!
காப்பாற்றினால் தான்
தெய்வமெனில்?
கரம் கூப்பிட
கருணையே
உன் வடிவாய்
மருத்துவரே!
செவிலித் தாயே!
- ச.கி

ஒன்று இணைவோம்!
பரவல் தடுப்போம்!
கொரோனாவை
ஒழித்திடுவோம்!

எழுதியவர் : ச.கில்பர்ட் (ச.கி) (2-Apr-20, 2:41 am)
சேர்த்தது : ச கி
பார்வை : 78

மேலே