காலை பொழுதினிலே

காலை பொழுதினிலே......

விடியலை உலகறிய உரைத்தது
கருநிற கொண்டை சேவல்..
சில்லென்று குளிர் காற்று
என் புறத்தினை மெய்சிலிர்க்க..
மலா்களில் மணம் மொய்த்த
தென்றல் என்னை மயக்க..
இளபரிதினை காணும் ஏக்கத்தோடு
இளங்காளை கன்று – தாயின்
அன்பினை தேடி எக்காளம் மிட்டது
தேனை தேடும் சிறுவண்டுகள்
மெல்லிசை இசைத்து- வாழ்வில்
புத்துணர்வை தொடங்கியது… .. ..

எழுதியவர் : வினோ பாரதி (4-Apr-20, 5:33 pm)
சேர்த்தது : வினோ பாரதி
Tanglish : kaalai poluthinile
பார்வை : 191

மேலே