உயர்மிகு உள்ளமவர்

பேரிடர் ஒன்று நிகழ்ந்தால் தெரியுது
இடரில் சிக்கித் தவிப்பவர் எவரென
அவர்படும் அல்லல் அகிலம் அறியுது
அன்றாட வாழ்வின் கடினம் புரியுது !

ஊரும் உலகும் உறவென கூறுபவரும்
தானும் தன்வீடுமென தஞ்சம் இன்று !
பதவியும் பவிசும் உள்ளவர் ஆயினும்
தன்னுயிர் காக்கும் நிலையில் இன்று !

எண்ணிப் பார்ப்பவர் இதையும் சிலரே
என்றும் உதவுபவர் அதிலும் மிகசிலரே !
துயர்மிகு நேரத்தில் துணையாய் நிற்பவர்
உயர்மிகு உள்ளமவர் உண்மை மனிதனவர்

எழுதியவர் : பழனி குமார் (7-Apr-20, 3:07 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 273

மேலே