முதல் பார்வை🌹

முதல் பார்வை🌹

முதல் பார்வையில் முற்றிலும் என்னை மூழ்கடித்த
மாய மோகினியே!
கல்லூரியில் காலடி எடுத்து வைத்தது தான் தாமதம் கல்வி கற்கும் முன் காதல் பாடம் எடுத்து விட்ட இளந்தென்றலே.
இனி இளமையின் திருவிழா இனிதே ஆரம்பம்.
வஞ்சி நீ கொஞ்சி, கொஞ்சி பேசும் தமிழ்
இன்னிசை மழையாய் தேனாக என் காதில் ஒலிக்கிறது .
உன் காந்த பார்வையால் சொக்கி போன எனக்கு தினம் கனவில் நீ இந்திரலொகத்து சுந்தரி தான்.
மொட்டை மாடியில் இரவின் மடியில் நிலவின் வெளிச்சத்தில் உன்னை நினைத்து ஆயிரம் கவிதைகள் எழுதலாம்.
புன்னகை பூவே!
உன்னை தென்றலாக வந்து தாலாட்டவா!
மயக்கம் விழியாளே!
மையாக வந்து கண்களில் குடியேரவா!
கொடி இடையாளே நீ படற பாரி வள்ளல் வழங்கிய தேராக மாறவா.
தேன் சிந்தும் உன் செவ்விதழில் தேனீயாக வந்து தேன்கூடு கட்டவா.
உன் தாமரை பாதம் தரையில் படமால் இருக்க மலர் படுக்கை விரிக்கவா.
என் வாழ்வின் வசந்தமே!
என் வாழ்க்கையின் விடியலே!
உன் புன்சிரிப்பு ஒன்று போதுமே
என்னை சுறுசுறுப்பாக்கி கொள்ள.
நம் இந்த கல்லூரி காதல் பயணம்
வெற்றி வாகை சூட வேண்டும்.
இது என் ஆணித்தரமான ஆசை
உன் அன்பு காதலன்,

- பாலு.

எழுதியவர் : பாலு (25-Apr-20, 6:57 pm)
பார்வை : 453

மேலே