அம்மாவின் மாமரம்

அம்மாவின் மாமரம்

அம்மா நட்ட மாமரம் அது
ஓங்கி வளர்ந்தது எங்களுடனே..

பணி கிடைத்து நானும்
மணமாகி அக்காவும்
போன பின்பு அம்மாவுக்கு
எல்லாமே மாமரம்தான்

மாமரத்தின் அருகே அம்மா
போகும் போதெல்லாம்
அதன் இலைகள் அம்மாவுடன்
பேசுவது போல இருக்கும்

திருமணத்திற்கு பின்பு மனைவி
சொன்னதினால் குப்பையாகிறது
என கிளைகளையும்,பின் வீட்டை
விரிவு படுத்த மரத்தையும்
வெட்டிய பின்னர் மரமிருந்த
இடத்திலே தனி அறை
எங்களுக்கு..

அறையில் தொலைக்காட்சியில்
விளம்பர இடைவேளை..
"எல்லா சீசனிலும் மாம்பழச் சாறு"
விளம்பரம் பார்த்த வண்ணம்
சலனமே இல்லாத மனைவி ..

உள்ளே நுழைந்த அம்மாவின்
விழிகளில் மட்டும் ஈரம்…


ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்

எழுதியவர் : ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன (30-Apr-20, 10:31 pm)
சேர்த்தது : Sridharan Venkatakrishnan
Tanglish : ammaavin maamaram
பார்வை : 123

மேலே