இப்படிக்கு மருதாணி

பெண்ணே!
உன் விரல் தீண்ட
வரம் கிடைத்த எனக்கு...
உன் இதழ் தீண்டும்
பாக்கியம் இல்லாமல் போனதே...
உந்தன் இதழ் உரசும்
உதட்டுச்சாயத்தின் மீது
கோபம் கொண்டேன்...

கோபம் கொண்ட
காரணத்தினால்தான் என்னவோ
பச்சையாக இருந்த நான்
சிவந்து விட்டேன்!!!

-இப்படிக்கு "மருதாணி"

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:49 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : ipadikku marudhani
பார்வை : 402

மேலே