வரும்முன் காப்போம்

கொரோனா வைரஸ்,
அடங்கும் வரை அடங்கி இருப்போம்...
ஓடும் வரை ஒடுங்கி இருப்போம்...

தொட்டால் ஒட்டிக்கொள்ளும்
ஒட்டியப் பின் ஓடியும் பயனில்லை

ஓடும் இடமெல்லாம் உடன் வரும் உயிர்கொல்லி...
உனைக்கொன்றப் பின்னும் அடங்காது... அழியாது...
அச்சம் ஒன்றும் வேண்டாம்...

நீ இறந்தப்பின் உறவினரும் நடுக்கம் கொள்வார்
உன்னுடல் அடக்கம் செய்துவிட...

உய்தல் அவசியம் நண்பா,
உலகம் காத்துவிடு...
நம் உறவும் அவசியம் நண்பா,
அவர்களுக்கும் அறிவுரைகள் சொல்லிவிடு...
அவசியமற்ற அறிவுரைகள் அறவே மறந்துவிடு...

பிறரை தொடினும் தொற்றிவிடும்,
அக்கிருமியை அக்கனமே அழித்துவிட
சிரம் தொடும் முன்னே,
கரம் கால்களை கழுவி விடு...

அறிவுரை அல்ல
என் அக்கரையின் வெளிப்பாடு
புதிய வாழ்வை தேடும்...
உங்கள் "கல்லறை" செல்வன்"...

எழுதியவர் : கல்லறை செல்வன் (5-May-20, 1:29 pm)
சேர்த்தது : கல்லறை செல்வன்
Tanglish : varummun kaappom
பார்வை : 93

மேலே