குருட்டு ஓவியனின் குழந்தை காதல்

மின்னல் கீற்றில் வந்துதித்த .
கடவுளின் குழந்தை நீதானே.
கையில் ஏந்தி தாலாட்ட .
என்ன தவம் நான் செய்தேனோ?
எந்தென் நெஞ்சின் நினைவினிலே.
எதுகை மோனை அறியலையே.
சேர்த்து வைத்த உன் நினைவை.
கிறுக்கி வைத்தேன் ஓலையிலே.
சிலம்பும் குறளும் தந்திடவே.
சங்கப்புலவன் நான் இல்லையே.
உந்தன் விழியில் உலகை கண்ட.
குருட்டு ஓவியன் நான் தானே.