இயல்பைக் காட்டிவிடும்

வீதியில் நடந்து செல்லும்
வழிபோக்கர் ஒருவர்
வீதி பெயரை சொல்லி
அவ்வழியே சென்றவரிடம்
வழி கேட்டார்

அதற்கு அவர் “ அந்த வீதியா
எந்த முட்டாளைக் கேட்டாலும்
சொல்வார்களே “ என்றார்,
வழிபோக்கரோ “ அதனால் தான்
உங்களிடம் கேட்டேனென்றார் “
இது தேவையா ?

அடுத்தவரை அவமதித்தால்
அசலும், வட்டியுமாக திரும்பும்
என உணர வேண்டும் ,
பிறரை இகழ்வது
பண்பற்றவனின் செயல்

மல்லிகைப்பூ கடைக்கு
மணமே விளம்பரம்
ஆவதுபோல்
இகழ்ந்து பேசும் பேச்சே
அவரின் இயல்பை காட்டி விடும்

எழுதியவர் : கோ. கணபதி. (17-Jun-20, 5:10 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 73

மேலே