முதிர் காதல்

காலமது தீர்கிறது
ஆனால் காதல் உன்னில் தீரவில்லை;

கூந்தல் அது நரைத்தாலும்
அதில் மயங்கி இன்னமும் நான் எழவில்லை;

நடை தளர்ந்தாலும்
உன்னுடன் தளர்ந்து நடக்க பாதை அது போதவில்லை;

கண்ணாடி கண்களை சிறை செய்தாலும்
அதில் விழுந்து நான் மீளவில்லை;

உன்னோடு வாழ்ந்த நாட்களில் வலியில்லை
நீ இல்லாமல் வாழ வழியுமில்லை;

சுவாசம்அது குறைந்தாலும்
என் நேசம் உன்னில் குறையவில்லை;

நீ இன்றி வாழ நினைத்தாலும்
அந்த வழக்கை இனிக்கவில்லை
ஏன் என்று நினைத்து பார்க்கையில்
கண் முன் வந்து நின்றது

முதிர்ந்த காதல் நிலை

எழுதியவர் : Kpk (18-Jun-20, 9:08 am)
சேர்த்தது : Kpk
Tanglish : mudhir kaadhal
பார்வை : 140

மேலே