புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 8---
புத்தன் வீட்டுப் பூக்கள் - ௮
71. வல்லவன் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வான்
வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்பவன் வல்லவனாய் இருப்பான்.
72. வாய்ப்புகள் வரும் போது பயன்படுத்திக் கொள்
அதைத் தொலைத்து விட்டுப் பின் சிந்திப்பதில் பயனில்லை.
73. உனக்காகத் தனிவழி பிறப்பதில்லை
இருக்கும் வழியை உனக்காகப் பயன்படுத்திக் கொள்.
74. உன்னை நீயே அடகு வைத்து
எந்தச் சுகத்தையும் வாங்காதே
அது துன்பத்தையே தரும்.
75. எவ்வளவு பெரிய விளக்காய் இருந்தாலும்
அதன் அடியில் உள்ள இருளை விரட்ட முடியாது.
76. தூரோகம் முன்னால் வந்து பூப்போல் சிரிக்கும்
பின்னால் நின்று தீப்போல் எரிக்கும்.
77. ஒரு வேலைக்கு முதலில் நீ தயாராகாமல்
அதே வேலைக்கு இன்னொருவரை அமர்த்துவது கடினம்.
78. ஊருக்கு அறிவுரைகள் சொல்பவன்
வீட்டுக்குள் விதிவிலக்காய் இருக்கிறான்.
79. எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டால்
ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது.
80. எவன் ஒருவன் செய்த தவறை ஞாயப் படுத்துகிறானோ?...
அப்போதே அவன்மனம் அதைத் தவறென ஏற்கத் தொடங்குகிறது.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..