சிறந்த கடிதம்

இரவு பகல் பாராமல்
இமைகள் துளியும் மூடாமல்...

தனிமை தந்த ஏக்கத்தினில்
மனதில் கிடந்த
காதலையெல்லாம்....
மணிக்கணக்கில் சேகரித்து
மறைக்காமல் வடிக்க நினைத்தேன்...
காதல் கடிதமாய். ....!

ஏனோ...
வடித்தவை அனைத்தும்
வார்த்தைகளல்ல....
வசந்தம் வீசும் தென்றலாய்....

காதலுடன் நான் எழுதிய
கவிதைகளெல்லாம்...
காற்றோடு தென்றலாய்
கலந்து போயின....

காணாமல் போன கவிதை தேடி
களைத்துப்போய். ...
கடிதத்தில் இட்டேன். ..

காதலோடு ஒரு முத்தம்....

என்னவளே ....
இதைவிட ஆகச்சிறந்த
இன்பக்கவிதை...
வேறு உண்டோ......?,
.

எழுதியவர் : Renu (9-Jul-20, 9:26 am)
சேர்த்தது : renu
Tanglish : sirantha kaditham
பார்வை : 104

மேலே