நீரோடையில் நீ வந்து நின்றபோது

நீரோடையில் நின்ற கொக்கு மீன் வராமல்
------காத்திருந்து காத்திருந்து ஏமாந்து பறந்து சென்றது
நீரோடையில் நீ வந்து நின்றபோது
-----மீன்கள் எல்லாம் துள்ளிவந்து உன் சிவந்த பாதங்களை முத்தமிட்டது
கூச்சத்தில் நீ குலுங்கிச் சிரித்திட பூக்கள் உதிர்ந்து விழ
-----நீரோடை உருமாறி மலரோடை ஆனது !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jul-20, 10:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 144

மேலே