சுற்றியவன் சும்மா இருந்தான்

எல்லாம் முடியும் எங்களால்
சொன்ன மனிதனை
சும்மா வீட்டில் இருக்கச்
‌ சொன்னது கொரானா.
இயற்கையையும் வெல்வோம்
நாங்கள் நினைத்தால்
ஆணவத்தின் உச்சத்தை
‌‌‌ அடக்கியது கொரானா!!

நாடு பேதமில்லை எந்த
ஜாதி மதமும் இல்லை
கருப்பர் வெள்ளை இல்லை
‌‌‌ ஆண் பெண்ணில்லை
அனைவரும் சமமே இன்று
மரணத்தின் வாசலில்.
சொன்னது உலகுக்கு இந்த
கண்ணுக்குத்தெரியாதகொரானா.

ஓடாதே பணத்துக்குப்பின் என்று
‌‌‌ கூடி வாழச் சொன்னது.
தேடாதே பொருட்களையே வாழ்வில்
தேடு உன் உறவுகளை
குடும்பத்தோடு இருக்கச்சொல்லி
வாய்ப்பைத் தந்த கொரானா
நாடு தோறும் அடங்கியவர்நலனே
ஓடியவர்மருத்துவமனையில்தனியே!!

எழுதியவர் : சு.இராமஜோதி (22-Jul-20, 11:34 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 123

மேலே