தாய் மனம்

கண்கள் சிரிக்க ஓடி
விளையாடிய தேவதையே.....
குடும்பத்திற்கே நீதிக்கூறிய
நீதி தேவதையே.....
பாலில் சூடு சற்று தணிந்தால்
கோபமாகும் குட்டித்தாயே......
குறையொன்று கண்டால்
கண்கலங்கும் சிறுப்பிள்ளையே...
ஊராரிடம் பொறாமையை
வளர்த்த செல்லப்பிள்ளையே......
உன் தந்தை தலைத்தூக்கி நடக்க
செய்த மகாராணியே......
தந்தையின் கனவே..... ஒரே
சொத்து நீ தானே......
அத்தனையும் ஒரு மாதத்தில்
உதறி சென்றாயடி.....
காதல் எனும் பெயரில்.....
தந்தையின் சுட்டித்தேவதை
மௌண தேவதை ஆனாயே......!
கோபமான தந்தை கண் கலங்குகிறார்.......
கோபத்தில் அல்ல.....


பாசத்தில்........!!!!!!

எழுதியவர் : Sangeetha Manikandan (22-Jul-20, 12:20 pm)
Tanglish : thaay manam
பார்வை : 178

மேலே