இதழ்களின் தண்டனை

பிழையாய் எதையும்

சொல்லி விட்டால்...

பின் உடனே உணர்ந்து

இதழ் கடிப்பாய் - வெகு

இயல்பாக..!!

தவறுகள் உன்னுடையது.!

ஆனால்...

தண்டனை மட்டும்

இதழ்களுக்கா.!?


கேலியாய் அவ்வப்போது

எதையாவது பேசிவிட்டு

பின்...

ஒய்யாரமாக நீ

உதடுகள் சுழிக்கின்றாய்..!!


உன்னிடம் சிக்கிக்கொண்டு

படாதபாடு படுகிறது போ.!

உன் இதழ்கள்.!!!


///---///---///

மருத கருப்பு.

எழுதியவர் : மருத கருப்பு (22-Jul-20, 12:17 pm)
பார்வை : 284

மேலே