மழை
*****************************************************************
ஒன்றை
மற்றொன்றாய் மாற்றிவிடும்
அற்புதத்தை
நொடிப்பொழுதில் நிகழ்த்திவிடுகிறது
இந்தத் திடீர் மழை.
சுருண்டு படுத்திருந்த
கோணிப்பையே
விரிந்த குடையுமானது
அந்தச் சாலையோர முதியவருக்கு..
பூக்கள் சுமந்த
காலிக் கூடையே
வாசம்வீசும் குடையுமானது
அந்தப் பூ விற்கும் பெண்ணிற்கு..
பயமுறுத்திய தேர்வின்
பரிட்சை அட்டையே
பாதுகாக்கும் குடையுமானது
அந்தப்பள்ளிச் சிறுவனுக்கு
கை பிடித்து நடத்திச் செல்லும்
தாயின் சீலைமுந்தானையே
விசாலமான குடையானது
அந்தக் குட்டிப்பையனுக்கு..