என் கண்களை குளமாக்கி விட்டாய் 555

என்னவளே...


நான் அழுத போது என் கண்ணீர்
துடைத்து ஆறுதல் சொன்னாய்...

என் கரம் கோர்த்து
உன் காதலை சொன்னாய்...

உன் மடிசாய்ந்தேன்
தாலாட்டு பாடினாய்...

காலமெல்லாம் என் விழிகளை
கலங்க விடமாட்டேன் என்றாய்...

இன்று என் கண்களை
குளமாக்கி விட்டாய்...

அன்று என் கண்ணீரை துடைத்து
ஆறுதல் சொன்னவள் நீதான்...

இன்று
காலமெல்லாம் என்னை...

கண்ணீர் சிந்த
வைத்தவளும் நீதான்...


இன்றுவரை
என் கன்னங்களை...

உப்பு நீர்
தழுவித்தான் செல்கிறது...

உன்னை நினைத்து.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (14-Sep-20, 6:06 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 759

மேலே