RIG VEDAM

RIG வேடம்

முதல் மண்டலம்

176 அத்தியாயம் (. 1 to 10)

966 ---- ஆதியில் சிருஷ்டிக்க யாரும் இல்லை. சத்தும் அசத்தும் இருந்திருக்கவில்லை. யாராவது இருந்தால் தானே சத்தும் அசத்தும் தெரிந்திருக்கும்.வானமும்
இல்லை வானத்துக்கு மேலுள்ளதும் இல்லை . வானத்தை போர்ர்த்தும் போர்வை
எங்கனமிருக்கும். அதற்கு எது இடமளிக்கும். மிருத்யு இல்லாமலிருநதது.
அம்மிருத்யு தன்மையும் இல்லை. அளவிடத்தகாத அழகிய ஜலம் எங்கனமிருக்கும்..
இரவி அல்லது பகலினுடை யச் சின்னமில்லாதிருந்தது. அந்த சுவாசமற்ற ஒன்று
தன்ஸ்வதாவினால் சுவாசித்தது. அதைத்தவிர வேறு எதுவும் இல்லாமலிருந்தது.
இருள் இருந்தது. இருந்த அனைத்தும் சூனியத்தால் மறைக்கப் பட்டிருந்தது. தவத்தின்
மகிமையால் அந்த ஏகம் பிறந்தது. முதல் இரேதஸ்தான காமம் இருந்தது. கவிகள் சத்து
அசத்து பரந்தவத்தைக் கண்டார்கள். சுவதா தாழ்ந்திருந்தது.மற்றவை உயர்ந்திருந்தது.
புசிப்பவன் உயர்ந்திருந்தான்.எவன் நிசமாய் அறிகிறான்.? எவன் இந்த உலகத்திலேயே
அந்த சிருஷ்டியின் உண்மையை அறிவிப்பான் ? எங்கிருந்து இந்த சிருடிi வந்தது.?
எக்காரணத்தால் அந்த சிருஷ்டி பிறப்பிக்கப்பட்டது. தேவர்கள் உலகின் சிருஷ்டிக்கும்
பிறகே தோன்றினார்கள் ஆதலால் அது எங்கிருந்து தோன்றியதென்பதை எவன் அறிகிறான்.
எவனிடமிருந்து இந்த தோன்றியதோ அவன் அதை ஏந்தலாம் அல்லது ஏந்தாமலிருக்களாம்.
அவனையன்றி அதை ஏந்த எவனாலும் முடியாது.. பரம் நிலையாததிலே எவனுடைய
கண் இந்த உலகத்தை நடத்துகிறதோ அவன் நிஜமாய் அந்த சிருஷ்டியை அறிகிறான்.
அவன் அறியவில்லை யேல் வேறு எவனும் அறியமாட்டான்.

43 அத்தியாயம் ருத்திரன்.

தேவர்களின் நடுவில் உத்தமன். மனைகளையும் செம்மறியாடு செம்மறிகடா
தருபவன். ஸ்திரி மனிதர்களுக்கும் பசுக்களுக் கும் சுகத்தைத் தருபவன்
43. ருத்திரன் இருதலங்களை உள்ளவன் சூரியனைப போல் பொன்னைப் போல் பிரகாசிப்பவன்


..

எழுதியவர் : பழனிராஜன் (31-Oct-20, 6:46 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே