காதலின் கடற்கரை- தொடர்ச்சி

அலைகளின் ஓசையினையும்‌ தாண்டி
ஆர்ப்பரித்தேன் ஆனந்தத்தில் – ஆம்!
நாங்கள் காதலர்கள் ஆனோம்! – என்று
எழுந்து நின்று…

அருகில் வந்தவன்
அன்போடு கேட்டான்
வாக்குறுதி கொடு
வாகீசன் பாதத்தை அடையும் வரை
இணைந்து வாழ்வோம் என்று! – பதிலளித்தேன்
பரலோகம் அடையும் வரை
பரமன் உன்னிடமே இருப்பேன் என்று;

கன்னங்கள் சிவக்க
கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டோம்;
செவ்விதழ் இணைந்தன
செம்மை வாழ்வின் அடையாளமாய்

அரவணைப்போடு என்னைப் பறக்க வைத்தான் – பூவுலகின்
அடியில் இருந்து ஓர் அடி மேலே..
முகத்தோடு முகம் புதைத்தாற் போல் – மீண்டும்
புவியை உணர்ந்தேன் என் பாதங்களால்!

காதலின் கதகதப்பினில்
கட்டி அணைத்துக் கொண்டோம்
காதலை வெளிப்படுத்தியவாறு;

அவ்வினாடியில் தோன்றியவை…
அப்பனே! தந்துவிடு
பிரியாத வரம் மட்டும்
பிறவி ஏழெழுக்கும்….

_ காதலின் கடற்கரை_ஜீவா…

எழுதியவர் : ஜுவரோசினி (18-Nov-20, 7:29 pm)
சேர்த்தது : jeeva
பார்வை : 108

மேலே