உன்னை ரொம்பவே புடிக்குமடி 555

***உன்னை ரொம்பவே புடிக்குமடி 555 ***


என்னுயிரே...


சந்தோச தருணங்களில்
மெல்லிய காற்றும்...

மெல்லிய இசையும்
எனக்கு பிடிக்கும்...

வலிகொண்ட நேரங்களில் சில
வரிகளும் சூறாவளியும் புடிக்கும்...

நீ என்னோடு கோபம் கொண்டு
பேசாமல் இருக்கும் போதெல்லாம்...

உன்னை
ரொம்பவே புடிக்குமடி...

இன்பமோ துன்பமோ
உன்னை மட்டும் ஏனடி...

எப்போதும்
பிடிக்கிறது எனக்கு...

மௌனமான என்
எழுத்துக்களை போல...

இன்று என்
காதலும் மெளனமாக...

என் நிழலுக்கே
குடை பிடித்தவள் நீ...

இன்று ஏனடி கண்ணீரில்
நனையவிட்டு சென்றாய்...

உன் சுகம் கனவே நானும்
இங்கு சுகமாக என்னுயிரே.....


*முதல் பூ பெ.மணி.....*

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (22-Nov-20, 9:42 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1265

மேலே