நகைச்சுவை துணுக்குகள் 29
உங்க ஆபீசுலே எத்தனை பேர் வேலை செய்யறாங்க?
50 பேர்
என்ன வெறும் 50 பேரா? ஆனாஉங்க கம்பெனிலே 300 பேர் இருக்கிறதாகச்சொன்னாரே நம்ம ராமசாமி.
அவர்சொன்னது உண்மைதான். இருக்கிறது 300 பேர்தான். ஆனா நீங்க கேட்டது எத்தனைபேர் வேலை செய்யறாங்கன்னுதானே கேட்டீங்க. அதைத்தான் நான் சொன்னேன்.
***********
அப்பா நான் ஒரு பெண்ணைக்கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். உங்க சம்மதம்தேவை
சாரி சொல்லு
எதுக்கப்பா? நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கல்லைய உங்களுக்கு.
சாரி சொல்லு.
எதுக்காக என்னை சாரி சொல்லச்சொல்றீங்க?
அதை யெல்லாம் கேக்காதே. முதல்லே சாரி சொல்லு.
எதுக்காக என்னை சாரி சொல்லச்சொல்றீங்க? நான்கேட்டதுலே என்ன தப்பு?
நீ கல்யாணம் பண்ணிக்கணும்னா, முதல்லே சாரி சொல்லு.
என்ன அப்பா, திரும்பத்திரும்ப சாரி சொல்லச்சொல்றீங்க?
எதுவும் கேக்காம சாரி சொல்லு.
சரி. சாரி அப்பா
எப்ப நீ எந்தக் காரணமும் தெரியாம சாரி கேட்டியோ, அப்பவே நீ கல்யாணம் பண்ணிக்கத்தயார் ஆயிட்டே. இனி நீ கல்யாணம் பண்ணிக்கலாம்.
***********
நோயாளி: வைத்தியர் ஐயா, எனக்கு மூட்டுக்கு மூட்டு உயிரே போற மாதிரி வலிக்குது.
ஆயுர்வேத வைத்தியர்: ( பரிசோதித்து விட்டு) சரி. நான் இப்ப ஒரு மருந்து தரேன். அதை நீங்க விடாம சாப்பிட்டுக்கொண்டு வரணும். ஆனால் உருளைக்கிழங்கு சாப்பிடறதை மட்டும் அடியோடு விட்டுடணும். என்ன சரியா?
மறு நாளிலிருந்தே அந்த நோயாளி அடியோடு விட்டு விட்டார், வைத்தியர் கொடுத்த ஆயுர்வேத மருந்தைச் சாப்பிடுவதை.
****************
கிண்டியிலேதான் பால்குடிப்பேன்னு அடம் பிடிக்கிறான் இந்த வாண்டுப்பயல்.
ஏன் சைதாப்பேட்டையிலோ, மாம்பலத்திலோ குடிக்கமாட்டானா?
நான் அதைச்சொல்லல்லே. சின்னக்குழந்தைங்க பால்குடிக்க நாம உபயோகிப்போமே அந்த கிண்டியைச்சொன்னேன்.
**********
அவங்க பொண்ணுக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சே. இன்னும் அவர் ஏன் மாப்பிள்ளையைத் தேடிகிட்டி இருக்கார்.
அவர் மாப்பிள்ளை கல்யாணமான மறுநாளே ஓடிப்போயிட்டார். அவரைத்தான் இப்போ தேடறார்.