கல்லூரி விடுதி

அமைதியாக ரம்மியமாக துயில் கலைந்த காலம் மாறியது தோழிகளின் கூக்குரலாக வகைவகையாய் அறுசுவை நொறுக்கு தீனிகளையும் அலட்சியமாக பார்த்த காலங்களும் நெஞ்சினுள் பதிந்திருக்க
காய்ந்த சப்பாத்திக்கும் கரிகிய அப்பளத்திற்கும் தோழிகளுடன் சண்டையிட்டு உண்ணும் சுகம் அலாதியானது
காரணமில்லா சண்டைகள்
முடிந்த சில நொடிகளில் வயிறு வலிக்க சிறிப்பு
சிறந்த நகைச்சுவைக்கு சிரிக்காமல் இருப்பதும்
சிரிப்பு வராத நகைச்சுவைக்கு குலுக்கி சிரிப்பது இங்க எங்களோட வழக்கம்
அன்னை தந்தையிடம் அச்சதுடன் மறைப்பவை கூட
எதார்த்தமாய் எங்களுக்குள் பகிர்ந்து கொள்ளப்படும்
எவருக்கும் இரத்த பந்தம் இல்லை ஆனால் ஒருத்தியின் காயம் எல்லோர் கண்ணீரையும் பார்க்கும்
காயங்களும் கண்ணிரும் கணிமைக்கும் வேளையில் மறைப்பதில் மகத்தானவர்கள்
கல்லாரியில் கற்ற பட்டப்பாடம் மறந்தாலும் கூட - இந்த கல்லூரியி கற்றுதந்ந வாழ்க்கை பாடம் மறக்காது
இன்பம், துன்பம் ,கோபம்,வலி சோகம் இத்தனையும் கலந்த இவ்வாழ்க்கை ஓர் சுகம்

எழுதியவர் : தீபிகா. சி (11-Jan-21, 3:44 pm)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 127

மேலே