தூக்கணாங்குருவிக் கூடு

தூக்கணாங்குருவிக் கூடு
******
சிறகுகள் முளைத்து சிட்டுகள் பறந்தாலும்
குருவிக் குஞ்சினை சுமந்த அக்கூடோ
நிறையிலா இதயத்து கணங்களைக் கழிக்க
மரமுதிர்த்த சருகுகள் தனிமைதனை உணர
சீராக வேய்ந்த அக்கூட்டினைப் பார்க்கவே
உறவினர் நிலையில் சோகத்தில் ஆழ
சூறையின் வேகத்தில் கூடுஅது அசைந்தாலும்
முறையாய் அணைந்த கிளையதன் பிடியில்
இருப்பது உயிருடன் தாளாத நிலையிலும்!

எழுதியவர் : சக்கரை வாசன் (7-Feb-21, 5:52 pm)
பார்வை : 40

மேலே