அரசியல்வாதிகளின் படை - வஞ்சித்தாழிசை

இருக்கட்டும் எனவெண்ணாதே
உருக்கிடுவோர் அரசியல்வாதிகள்
திருட்டுகள் செய்யவே
நெருங்கியே வருகின்றனர்.

கறைபட்டுத் தண்டனையால்
சிறைப்பட்டோர் எல்லாம்
நிறைகுறைகள் மறந்தே
பிறைச்சூடிய கடவுளாக.

வலம்வந்து வாக்குகேட்டு
நலந்தானா எனவும்கேட்டு
கலகலவென சிரித்தவாறு
புலன்னறிவார் அரசியலரே

அன்னமென ஆராய்ந்து
உன்னால் பார்த்துதெளிந்த
முன்னால் செயல்களின்படி
சொன்னாலே முடிவுசரியாகும்
------ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (4-Mar-21, 10:17 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 76

மேலே