மழை

மழைத்துளி போல் மனசுக்குள் வந்து மனசின் நிறத்தை மாற்றியவள்!

மரங்களை போல அசைந்து ஆடி என் கண்முன்னே ஓடி வருபவள்!

புன்னகை என்னும் மின்னல் கீற்றால்
என் இதயத்தை கீறிவிட்டு செல்பவள்!

காரிருள் கூந்தல் கொண்டு கருசாட்டை போல என்னை தாக்குபவள்!

தேகமெங்கும் குளிர்ந்த தென்றலாய் வருடி என்னுள் ஆனந்தம் கூட்டுபவள்!

இத்தனை இன்பங்கள் தரும்
மழை பெண்ணே!
உன் வரவை கொண்டாடி தீர்ப்போம்!

எழுதியவர் : சுதாவி (16-Apr-21, 4:27 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : mazhai
பார்வை : 67

மேலே