குத்தும் பிளக்கும் கழிக்கும்

ஆயுதம் ஒன்றுதான் எழில் மனிதா
வெட்டும் சீவும் செதுக்கும்
குத்தும் பிளக்கும் கழிக்கும்
கத்தி என்றும் அழைப்பர்

அறிவும் அதுபோல் ஆயுதமே
சிறப்பாக்கும் எழிலாக்கும்
புகழாக்கும் தனித்துவைக்கும்
பெயரை நிலைத்து வைக்கும்

செயற்பாடும் சிறந்த ஒன்றாம்
துயர் தீர்க்கும் களைப்பகற்றும்
அரிய ஒன்றை நிலை நிறுத்தும்
அனைவரையும் ஊக்குவிக்கும்

கல்வியும் கதிரவன் போன்றதாம்
வாழ்வில் விளக்காகும் விளங்கவைக்கும்
விண்ணில் பாயவே ஊர்தி தரும்
மண்ணுள் புகவும் வாகனமும் தரும்

பேச்சு என்பதோ மின்மினியாம்
நாசமாக்கும் அச்சமும் தரும் நம்பவைக்கும்
அனைவரையும் பகையாக்கும்
ஆறு பரம்பரையின் ஆயூள் அழிக்குமே.

---------நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (28-Apr-21, 6:25 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 68

மேலே