சிவப்பி தழ்ச்சிரிப்பில் சித்திரந் தோற்கும் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
சிவப்பி தழ்தன்னில் சித்திரந் தோற்றிடும்;
சிவந்த கன்னத்தில் செம்மாங் கனிதோன்றும்!
சிவந்த சீர்கண்கள் செப்பிடுங் காதலை
சிவந்தி பாராது சென்றால் மனம்நோகும்!