துளிப்பாக்கள்

விழுந்த நிழலில்
ஒதுங்கி கிடந்தது
வெட்டப்பட்ட கிளை...

கத்திப் பார்த்தேன்
நகைத்து விட்டு நகர்ந்தது
காக்கை.

கண்ட நாள் முதல்
பிடித்துப் போனது
வெட்கம்.. 

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (22-May-21, 11:01 pm)
பார்வை : 91

மேலே