நாவை அடக்கு
*தினம் ஒரு பா*
" *நாவை அடக்கு "*
வாயெனும் குழியி னுள்ளே
வாய்த்ததாம் சதையாய்த் துண்டாய்
நாயென மொழியும் பேச்சும்
நலமிகு தமிழ்சொல் வீச்சும்
நோயென தழுவிச் செல்லும்
நோவினைத் தருமே நாக்காம்
போயெதும் படியா வண்ணம்
போயதை அடக்கல் நன்றே.
( *அறுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்).*
மரு.ப.ஆதம் சேக் அலி.