நாவை அடக்கு

*தினம் ஒரு பா*

" *நாவை அடக்கு "*

வாயெனும் குழியி னுள்ளே
வாய்த்ததாம் சதையாய்த் துண்டாய்
நாயென மொழியும் பேச்சும்
நலமிகு தமிழ்சொல் வீச்சும்
நோயென தழுவிச் செல்லும்
நோவினைத் தருமே நாக்காம்
போயெதும் படியா வண்ணம்
போயதை அடக்கல் நன்றே.

( *அறுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்).*

மரு.ப.ஆதம் சேக் அலி.

எழுதியவர் : PASALI (6-Jun-21, 5:58 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 89

மேலே