எங்கே சென்றால் என்ன
இமைகள் மூடித்திறந்தேன்
என் விழிகளுக்குள் நீ
சிக்கிக்கொண்டாய்!
உதடுகள் திறந்து உன்
பெயர் உச்சரித்தேன்!
என் இதயத்திற்குள் நீ
உட்கார்ந்து கொண்டாய்!
மூக்கின் வழியே
மூச்சுக்காற்றாய் நுழைந்து
நுரையீலை யும்
வியாபித்துக் கொண்டாய்!
இனிமேல் நீ
என்னைவிட்டு எங்கே
சென்றால் என்ன?
என்னுள்ளே நீ கலந்த பின்னே
உன்னுடன் தானே வருவேன்
நானும்...