காண்பது எப்பொழுது

சினுங்கும் செல்போன்
மணிக்காக தினம், தினம் ஏங்குகிறேன்!

உற்சவர் வரவை எதிர்நோக்கும் பக்தனாய் உன்
அலைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறேன்!

குயிலோசை எழுப்பும் பறவையே
உன் எழில்முகம்
காண்பது எப்போது!

வாசனை பரப்பும் வண்ண
மலரே நீ
வருகை புரிவது எப்போது!

திரையிட்டு திருமுகத்தை மறைக்காதே!

கடல் அலையாய் இல்லாமல்
என் கண் இமையில்
கரை சேர்த்திடு!

எழுதியவர் : சுதாவி (30-Jun-21, 8:01 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kaanbadhu eppoluthu
பார்வை : 136

மேலே