கறி உப்பு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
மந்தம் பொருமலறும் வாயுவும்போம் தீபனமாம்
தொந்தித்த ஐயந் தொடருமோ - சந்ததமும்
அக்கினியின் புஷ்டி அடருங் கறியுப்பால்
சிக்குகின்ற நீர்இறங்குஞ் செப்பு
- பதார்த்த குண சிந்தாமணி
இது வயிற்றுப்பிசம், வாதம், கபம், நீரடைப்பு, இவற்றை நீக்கி பசியையும் காமாக்கினியையும் விருத்தி யாக்கும்