பெண்கள் தம் மனம்போல் நடத்தற்குரியர் அல்லர் எனல் - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
மணம்புரி வதன்முன் குரவரா ணையில்
..மணவினை முற்றிய பின்னர்
இணங்குற அருள்செய் கொழுநனா ணையில்
..இருப்பர்தம் வயமில ரென்றும்
அணங்கனை யவர்தாம் என்பதை அறிந்தும்
..அடாதவிச் செயலினைச் செய்தாய்
பிணங்குவார் இலையென் றிருந்தனை போலும்
..பேதைநீ என்றுதான் முனிந்தாள். 79
- பிரபுலிங்க லீலை