பண்ணால் உன்னை
ஆசிரியத்தாழிசை
பொழிகின்றாய் பொழிகின்றாய் பொன்னென மழையையே
குழிகளும் அகழியும் ஏரிகளும் நிரம்பிட
உழவரின் தொழிலுக்கு உறுதுணையென தாயேநீ
வழிந்துவோடும் சிறுதூறல் வன்மையாய் மாறியபடி
அழுக்கு நிறைந்த வெள்ளமாய் அனைத்தையும்
இழுத்தபடி பொழிகின்ற மழையே வணங்குகிறேன்
மண்ணின் வளத்தை மாற்றும் ஆற்றலை
தண்ணீர் மூலமாய் செய்யும் தெய்வமே
பண்ணால் உன்னை பாடுவதும் பெருமையே
----- நன்னாடன்