மாலையின் காதல்துன்பம்

நேரிசை வெண்பா
காலைமாலை ஒன்றிய நம்மில் அவரின்று
வேலைநிமித் தம்காலை விட்டேக -- காலைநன்மை
என்னில் பெறாநகர யிம்மாலை நிற்பதேன்
துன்பம் விளைவித்தார் போல்

காலையும் மாலையும் காதலர் உடனிருந்த நாள் போல இல்லாமல் அவர் இன்று பிரிய
நேர் மாறான இயல்பு கொண்டுள்ளன . அவற்றுள் நான்காலை பொழுதுக்கு செய்த நனமை
என்ன அது தானே கழிந்து போனது . ஆனால் மாலைக்கு நான் துன்பம் ஏதும் கொடுக்காத
போதும் அது நகராமல் அவர் நினைப்பை தந்துகொண்டே இருந்து தொல்லை தருகிறது
..............

காமத்துப்பால் குறள். 5/15. .......

எழுதியவர் : பழனி ராஜன் (31-Jul-21, 9:00 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 49

மேலே