என்னை விரும்பியவள்

என்னை விரும்பியவள் தான்
என் மீது காரணமே இல்லாமல்
வெறுப்பு கொண்டு
என்னை விட்டு பிரிந்து
சென்றுவிட்டாள் ...!!

ஆனால்....
அவளின் உள்ளமும்
அவளது நினைவுகளும்
என்னிடம் தான் இருக்கு
இதனை யாரிடமும்
என்னால் சொல்ல முடியாது ...!!

என் நிலைமையோ
திருவிழாவில்
கைபிடித்து வந்தவர்களை
பிரிந்து திரு திருவென
முழித்துக்கொண்டு
நிற்கும் சிறுவனை போல்
நான் நிற்கிறேன் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (31-Aug-21, 11:31 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1305

மேலே